ஸஹீஹ் அல்-புகாரி ஹதீஸ் 2
அல்-ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரலியல்லாஹு அன்ஹு) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களுக்கு இறைச்செய்தி (வஹி ) எவ்வாறு வருகிறது?”
அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“சில நேரங்களில் அது மணி ஒலி போல எனக்கு வரும் . அது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும். (அதன் பிறகு)அவர் கூறியதை நான் நன்கு மனப்பாடம் செய்யும்நிலையில் (அந்த வானவர்) என்னை விட்டும் பிரிந்து விடுவார்.
சில நேரங்களில், ஒரு வானவர் (மலக்) ஒரு மனிதராக வந்து என்னிடம் பேசுவார். நான் அவர் சொல்வதை மனனம் செய்துகொள்வேன்.”
ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள்:
“நான் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மிகுந்த குளிரான நாளில் இறைச்செய்தி (வஹி ) வருவதை பார்த்திருக்கிறேன்., அந்த வானவர் அவரை விட்டும் பிரிந்த பிறகும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நெற்றியில் வியர்வை வழிந்தோடிக்கொண்டிருக்கும் .”
அறிவிப்பாளர் : ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا
أَنَّ الْحَارِثَ بْنَ هِشَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْيَانًا يَأْتِينِي مِثْلَ صَلْصَلَةِ الْجَرَسِ وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ فَيُفْصَمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ عَنْهُ مَا قَالَ وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِي الْمَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا وَلَقَدْ رَأَيْتُهُ يَنْزِلُ عَلَيْهِ الْوَحْيُ فِي الْيَوْمِ الشَّدِيدِ الْبَرْدِ فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا
Leave a Reply